Saturday, November 15, 2008

காதலும் கடவுள் தான் !!!!

இதுவரை நான் நாத்திகனாய் தான் இருந்தேன் ,

கடவுளை உணராமல் இருந்ததால்,

ஆனால் இன்று நானும் ஆத்திகன் ஆகி விட்டேன்

காதலை உணர்ந்து விட்டதால் ....!!!!

கவிதை தேர் !!!

நகர மறுக்கிறது என் கவிதை தேர் !!!
கற்பனை எனும் சக்கரங்கள் பூட்டியும் ,
ஏனோ, கேட்கிறது உன் நினைவுகளை ,
இழுத்து செல்லும் கயிறாக ..............!!!!

காதலை தொலைத்தவனின் ஏக்கம் !!!

பேசி இருக்கலாம்
நான் பேச தயங்கிய வார்த்தைகளை .......!
பார்க்காமல் இருந்திருக்கலாம்
அவளது ஓர விழி பார்வைகளை ......!
கேட்காமல் இருந்திருக்கலாம்
அவளது செல்ல சிணுங்கல்களை .......!
தவிர்த்து இருந்திருக்கலாம்
அவளை பற்றிய சிந்தனைகளை ......!
அறிய வைத்துஇருக்கலாம்
அவள் மேல் நான் வைத்திருந்த நேசங்களை ....!
சொல்லி இருக்கலாம்
நான் சொல்ல பயந்த காதலை ..........!.
சொல்லி இருந்தால் ,வாழ்ந்து இருக்கலாம் ஒருவேளை ,
நான் தொலைத்து நிற்கும் வாழ்க்கையை .........!!